Niet blij met je aankoop? Geeft niet! Je kunt artikelen tot 30 dagen retourneren
Met een cadeaubon zit je altijd goed. De ontvanger kan de cadeaubon voor alles uit ons assortiment inwisselen.
Tot 30 dagen retourrecht
சென்னை 'ஆனந்தபோதினி'மாதப்பதிப்பிலும், காரைக்குடி 'குமரன்' வாரப்பதிப்பிலும் பத்தாண்டுகளுக்கு முன்பு நான் எழுதியிருந்த இலக்கியக் கட்டுரைகளில் இருபத்திரண்டைத் தொகுத்து 'ஆனந்தக்குமரன்'என்னும் பெயரால் வெளியிட்டுள்ளேன். கட்டுரைகளில் பழமையும் புதுமையும் விரவியிருத்தலால் பழமை பாராட்டுவோர்க்கும் புதுமை பார்ப்போர்க்கும் இந்நூல் ஏற்புடையதாகும் என்றெண்ணுகிறேன். 'ஆனந்தக்குமரனை'ஆர்வமுற எடுத்து அச்சிட்டுதவிய காஞ்சி 'தமிழ்க்கலை'ஆசிரியரும் என் நண்பரும் ஆகிய வித்வான் அ. மு. பரமசிவானந்தர்க்கும் அச்சகத்தார்க்கும் எனது மனமார்ந்த நன்றி உரியதாகும்.
இயற்கைவளஞ் சான்ற மலைகள் எந்நாட்டு மாந்தர்க்கும் இன்பம் விளைப்பனவாம். தமிழ்நாட்டில் அடுக்கடுக்காக ஓங்கி உயர்ந்த குன்றுகளையும், அவற்றினின்று பொங்கி வழிந்து இறங்கிய அருவி களையும் கண்டு களிப்புற்ற பண்டைத் தமிழ் மக்கள், ஆண்டு இறை நலம் சிறந்து இலங்கக் கண்டார்கள். இத்தகைய தெய்வமணம் கமழும் மலைகளுள் தமிழ் முனிவன் வாழும் பொதியமலை தலைசிறந்ததாகும். மஞ்சுலாவும் அம்மலை முடியில் விளங்கும் வெண்மதியின் தண்ணொளியும், அம்மலைச்சாரலி லமைந்த நறும் பூம்பொழில்களில் தவழ்ந்து திரியும் தென்றலின் இனிமையும், கருமலையினின்று இழியும் வெள்ளருவியின் வனப்பும் மாந்தர் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்வனவாம்.
Hoi! Ik ben Libroamiko, je boekadviseur.
Hoe kan ik je helpen?